↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஹீரோயின்களை ஊறுகாய் போல பயன்படுத்திவிட்டு உதறித்தள்ளுகிற ஸ்டைல் இப்போதுதான். முன்பெல்லாம் அவர்களுக்கும் படத்தில் வெயிட்டான ரோல் இருக்கும். ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, சுஜாதா என்று அவர்களை போல இப்போது நடிகைகளுக்கு வழங்கப்படும் அந்தஸ்து ரொம்பவே புவர். அந்த நடைமுறை ஒழிந்த கால கட்டத்தில் வந்தாலும், நயன்தாரா மட்டும் கெட்டி. படத்தின் கதையை கேட்கும் போதே தனக்கு நடிப்பில் ஸ்கோப் இருக்கிறதா என்று பார்த்துதான் ஒப்புக் கொள்வார். அதனால்தான் வண்டி இன்னும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எடைக்கு எடை கரன்ஸியை கொட்டவும் தயாராக இருக்கிறது தமிழ் சினிமா.
ஆனால் ஹன்சிகா போகிற வேகத்தை பார்த்தால், ஆமை ஓவர்டேக் செய்துவிடும் போலிருக்கிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் எல்லாம் அவருக்கு மரங்களை சுற்றி ஆடி வரும் ‘பெத்த பெரிய’ கேரக்டர்கள்தான் வழங்கப்பட்டன. அவரும் வேண்டா வெறுப்பாக நடித்துவிட்டு பொட்டியை கட்டுவதிலேயே குறியாக இருந்தார். இந்த நிலையில்தான் புலி படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தன. விசாரித்தால், ஹன்சிகாவை விட ஸ்ரீதேவிக்குதான் முரட்டு கேரக்டராம்.
அதாவது படம் முழுக்க வருபவர் அவர்தானாம். மும்பையிலிருந்து வெகு காலத்திற்கு பிறகு நடிக்க அழைத்து வரப்பட்டிருக்கும் ஸ்ரீதேவிக்கு, இது செகன்ட் இன்னிங்ஸ் ஆக இருக்கப் போவது நிச்சயம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இது பேன்ட்டஸி படம் பேன்ட்டஸி படம் என்று கூறிவருகிறார்கள் அல்லவா? படத்தில் ஒரு போர்ஷன்தானாம் அது. மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும் சமூக கதையில்தான் அடித்து பொளந்து கட்டப் போகிறார் விஜய்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top