திரைப்படங்களில் எவ்வளவு கவர்ச்சியான உடையை அணிந்தாலும் நிஜ வாழ்க்கையில் கவர்ச்சி உடைகள் குட்டை பாவடையெல்லாம் அணிய மாட்டேன் என்று கூறியுள்ளார் அனுஷ்கா.
இதுகுறித்து அவர் கூறியதாவது, சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானேன். அப்போது இயக்குனர் ஒரு ஆடையை கொடுத்து, அதை அணிந்துகொண்டு வர சொன்னார். அந்த ஆடையை விரித்து பார்த்ததும் ஷாக் ஆயிட்டேன். அந்த ஆடை ரொம்ப குட்டையாக இருந்தது. இதையா அணிய வேண்டும் என்று கேட்டேன். ஆமாம் கதைப்படி உங்கள் கேரக்டருக்கு இந்த ஆடை தான் அணியவேண்டும் என்றனர். வேறு வழியின்றி உடுத்திக் கொண்டு நடித்தேன்.
வீட்டில் உள்ளவர்கள் ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறாய் என்று கோபப்பட்டனர். கதைக்கு கவர்ச்சி ஆடை அவசியம் என்றால் அதை உடுத்திக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் வேறு மாதிரி இருக்கிறேன். சினிமா அனுஷ்காவை நிஜவாழ்க்கையில் பார்க்க முடியாது. பட விழாக்கள் பொது விழாக்களுக்கு கலாச்சார முறைப்படி ஆடைகள் அணிந்து செல்கிறேன். சினிமாவில் உடுத்துவது போன்ற குட்டை பாவாடை, கவர்ச்சி உடைகளை அணிய மாட்டேன் என்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.