↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நலம் விரும்பிகள் பரப்பும் வதந்தி டாப்ஸி வேதனை
‘பி கே'  இந்தி படத்தையடுத்து ஆமிர்கான் நடிக்கும் ‘டங்கால்'  படத்தில் அவருக்கு மகளாக நடிக்க கங்கனா ரனாவத்திடம் பேசப்பட்டது. அவர் நடிக்க மறுத்ததையடுத்து டாப்ஸிக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.இதுபற்றி டாப்ஸி கூறும்போது, ‘நிறைய நலம் விரும்பிகள் என்னை சுற்றி இருப்பதால் இதுபோன்ற தகவல்கள் வெளிவருகிறது. இந்த வதந்தியை பரப்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் ஆமிர்கான் படத்தில் நான் நடிப்பதாக கூறப்படும் விஷயம் எனக்கே இப்போதுதான் ஒரு தகவலாக காதில் விழுகிறது.

 எனக்கு பிளஸ் ஆக இருக்கும் என்று எண்ணி சிலர் பரப்பும் இதுபோன்ற வதந்திகள் மைனஸாக அமைந்துவிடுகிறது‘‘ என்றார்.இதுகுறித்து பட தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது,‘ஆமிர்கான் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. ஹீரோயினை அவசர அவசரமாக  தேர்வு செய்ய வேண்டியதில்லை. ஒருவேளை டாப்ஸி தேர்வு செய்யப்பட்டாலும் ஏற்கனவே அவர் அதே நாட்களில் ஒப்புக்கொண்டிருக்கும் படப்பிடிப்பு நாட்களின் கால்ஷீட்டை எப்படி அட்ஜெஸ்ட் செய்து தருவார்? அவர் நடிக்க மாட்டார்'  என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top