↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பெற்ற ‘‘ஒரு மெல்லிசான கோடு…. கோட்டுக்கு அந்த பக்கம் நான் நல்லவன்… இந்த பக்கம் நான் ரொம்ப கெட்டவன்…’’ என்ற வசனம் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு விஜய் ரசிகர்கள் இந்த வசனத்தை ட்ரோல் செய்தும் பிரபலமாக்கினார்கள். தற்போது இந்த வசனம் அர்ஜுன் நடிக்கும் படத்தின் தலைப்பாகியிருக்கிறது.
குப்பி, வனயுத்தம் போன்ற வித்யாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குனர் என பாராட்டப் பட்ட A.M.R. ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு “ஒரு மெல்லிய கோடு” என்று பெயரிட்டுள்ளார். இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா, ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
oru-melliya-kodu-movie-launch-photos
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். சேதுஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அக்ஷயா கிரியேசன்ஸ் சார்பில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.
படு திரில்லர், ஆக்ஷன் படமாக “ஒரு மெல்லிய கோடு“ இருக்கும். விறுவிறுப்பான திரைக்கதை படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு செல்லும் அப்படியொரு காட்சிகள் இருக்கும். மேக்கிங் முதற்கொண்டு அணைத்து விஷயங்களிலும் “ஒரு மெல்லிய கோடு” பாராட்டப் படும் படமாக இருக்கும் என்றார் A.M.R.ரமேஷ்.
படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இந்த படத்தின் துவக்கவிழா இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது..
விழாவில் இசைஞானி இளையராஜா அவர்கள் பேசியது… ஹாலிவுட் படங்களை விட தமிழில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. நிறைய திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். சிவப்பு ரோஜாக்கள் படம் தான் நான் இசையமைத்த முதல் திரில்லர் படம்.. அந்த வகையில் இந்த ஒரு மெல்லிய கோடு படமும் வெற்றி பெரும் என்று கூறினார்.
விழாவில் அர்ஜுன் பேசியது… இயக்குனரிடம் இந்த கதையை கேட்டவுடன் மிரண்டுவிட்டேன். அப்படியொரு திரைக்கதை நான் நடித்த படங்களிலேயே இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top