
சமீபத்தில் வெளியான மீகாமன் படத்தில் கால்கேர்ளாக நடித்ததில் பாராட்டு கிடைத்தது. ‘நமீதாவுக்கு போட்டியாக வந்திருக்கிறீர்களா?' என்கிறார்கள். அவர் என்னுடைய சீனியர். அவருக்கென்று ஒரு பாணி இருக்கிறது. அதை நான் பின்பற்றுவதில்லை. எனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டால்தான் எனக்கு பெயர் கிடைக்கும். இல்லாவிட்டால் நமீதா மாதிரி நடித்திருக்கிறார் என்று கூறிவிடுவார்கள். எந்த நடிகைக்கும் தனித்தன்மை முக்கியம் என்று கருதுகிறேன். சமீபகாலமாக இணைய தள வரம்பு மீறல்கள் அதிகரித்துவிட்டது. நடிகைகளின் ஆபாச படங்களை மார்பிங் செய்தும், குளிக்கும் காட்சிகளையும் திருட்டுத்தனமாக படமாக்கி வெளியிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் அவர்களின் அக்கா, தங்கை, மனைவி பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் குளிக்கும்போது படம் எடுத்து வெளியிட்டால் அவர்கள் மனது என்ன பாடுபடும். மற்றவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்.இவ்வாறு சஞ்சனா சிங் கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.