↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். முதியோர்கள் சிலரையும் பராமரித்து வருகிறார். இவர்களுக்காக ஆதரவற்றோர் இல்லம் கட்ட மும்பையில் இடம் வாங்கி இருக்கிறார். இது பற்றி அவரது தரப்பில் கூறும்போது, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பிறகு மீண்டும் உதயநிதியுடன் ஹன்சிகா இணைந்து இதயம் முரளி படத்தில் நடிக்கிறார். கல்லூரி மாணவியாக நடிக்கும் இப்படத்தை அஹமத் இயக்குகிறார். இதற்கிடையில் விஜய்யுடன் ' புலி' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்தார்.
மேலும் 2 பாடல் காட்சிகளில் நடிக்கிறார். அதில் ஒன்று வெளிநாட்டில் படமாகிறது. முதன்முறையாக இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் ஹன்சிகா நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூல¤யட் படத்தில் நடித்து வருகிறார். தவிர இன்னும் பல படங்களில் நடிக்கிறார். இதற்கிடையில் ஹன்சிகா படப்பிடிப்பிலிருந்து சில நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளார். அவர் வளர்த்து வரும் ஆதரவற்ற குழந்தைகள் 30 பேரில் 2 குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களை உடனிருந்து கவனித்துக்கொள்ள இந்த ஓய்வு எடுக்கிறார்‘ என்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.