
சிம்பு, பல்லவி சுபாஷை வைத்து கௌதம் ஆரம்பித்த படம், என்னை அறிந்தால் படத்துக்கு அஜீத் கால்ஷீட் தந்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. என்னை அறிந்தால் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை முதல் மீண்டும் சிம்புவை இயக்குகிறார் கௌதம்.
இதுவொரு குறுகியகால தயாரிப்பு. சில மாதங்களிலேயே படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர். நமக்குக் கிடைத்த தகவல் உண்மையாக இருந்தால் பல்லவி சுபாஷ் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் வேறெnருவர் ஹீரோயினாக ஒப்பந்தமாகலாம்.
எது எப்படியிருந்தாலும் மே மாதத்துக்கு முன் படத்தை முடித்து வெளியிடுவது என்பதில் கௌதம் உறுதியாக இருக்கிறார். சிம்பு படத்தை முடித்தபின் விக்ரம் படத்தை தொடங்கயிருப்பதால்தான் இந்த அவசரம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.