↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது காதல், திருமணம் போன்ற எதைப்பற்றியும வாய் திறக்காமல் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த இலியானா, பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியபிறகு துணிச்சலாக பேட்டி தரத் தொடங்கினார். தனது பாய்பிரண்ட் ஆஸ்திரேலியா போட்டோகிராபரான ஆண்ட்ரூ பற்றிய ரகசியத்தையும் வெளியிட்டார்.
பெண்கள் மருத்துவ இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள செக்ஸ் உறவு கொள்வது அவசியம் எனவும் பேட்டி அளித்து சர்ச்சையை கிளப்பினார். தற்போது திருமண உறவு பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.
‘திருமணம் செய்து கொண்டால் வாழும்வரை ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும். திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவியாக சேர்ந்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லலாம். திருமணம் என்பது விமானத்தில் பயணம் செய்வதுபோன்றது. ஒருமுறை விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்டால் நடுவழியில் இறங்க முடியாது'  என்றார் இலியானா.
திருமணத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் அவர் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top