↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் தேர்தலுக்கு முன் இராபோசன விருந்தை நடாத்திய விதத்தில் இரவு உணவிற்காக செலவிடப்பட்ட தொகையாக ரூபாய் 17,00,000 க்கான விபரப்பட்டியலின் தொகையை செலுத்துமாறு மூன்று நிறுவனங்களினால் ஜனாதிபதி காரியாலயத்திற்கு கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த இரவு விருந்துபசாரம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்காக வழங்கப்பட்ட உணவிற்கான தொகையாகும்.
தனியார் நிறுவனங்கள் மூன்றினால் வழங்கப்பட்ட இந்த உணவு பொதி 6200 ஆகும். இதன் விலை பெறுமதியோ 250 முதல் 1500, 2200 மற்றும் 2500 ஆக ஒவ்வொரு பொதிக்கும் தகுதியின் அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 12 வீதம் வற் வரியும் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் டாக்டர் சுசில் ஜயந்த நவரட்னவிற்கு ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள தொகை 1,692,400  இந்த தொகையை செலுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் ஹிரிம்புரிகமவை செலுத்துமாறு ஜனாதிபதி காரியாலயம் கட்டளையிட்டுள்ளது.
எனினும் இன்று வரை இந்த உணவிற்கான கடன் செலுத்தப்படவில்லை என்று தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top