↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாகுபாலி படத்தை முடித்துவிட்டு சினிமாவை விட்டே ஒதுங்கிவிடலாம் என்கிற அளவுக்கு ‘போதும் சினிமா’வாகிவிட்டார் அனுஷ்கா. முப்பது வயதை கடந்துவிட்டதாலும், கல்யாண ஆசை வந்துவிட்டதாலும்தான் இந்த முடிவு. ஆனால் அந்த படத்தின் வெற்றி அவர் பேச்சை அவரையே மாற்ற வைக்கும் என்றெல்லாம் ஆந்திராவில் ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அதே அனுஷ்கா, அதே சூர்யாவுடன், அவுத்துப்போட்ட காக்கி சட்டையை மீண்டும் துவைக்க கிளம்பியிருக்கிறார் டைரக்டர் ஹரி.
வேறொன்றுமில்ல, சிங்கம் பார்ட் 3 எடுக்கப் போகிறார்களாம். இதில் அனுஷ்காவே நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். முன் கூட்டியே இந்த அழைப்பு அனுஷ்காவுக்கு போயிருப்பதாகவும் தகவல். ஒருவேளை அவர் மறுத்தால்?
அதற்கெல்லாம் அசருகிறவரா ஹரி? தாமிரபரணி படத்தில் நடிக்க தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட நயன்தாரா மறுத்ததும் ஒரு விஷயம் செய்தாரே, அதையே மறுபடியும் செஞ்சுட்டா போச்சு. நயன்தாரா மாதிரியே சாயல் உள்ள பானுவை அறிமுகப்படுத்தினாரல்லவா? அதைப்போல அனுஷ்கா போலவே ஒரு பெண்ணை அழைத்து வருவது அவ்வளவு கஷ்டமா என்ன? சிம்ரன் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதற்காக அவரைப்போலவே முகத்தோற்றம் உள்ள நிலாவை அறிமுகப்படுத்தினார் எஸ்.ஜே.சூர்யா.
இங்கு ஒரிஜனல் இல்லேன்னா போகட்டும், டூப்ளி கேட்டுகள்தான் இறைந்து கிடக்கிறதே!

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top