↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

‘மதராச பட்டினம்' எமி ஜாக்சன் கோலிவுட்டில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த நிலையில் கவுதம் மேனன் இயக்கிய ‘ஏக் தீவானா தா‘ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அப்பட ஹீரோ பிரதீக் பாபருடன் எமிக்கு காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக சுற்றித் திரிந்ததுடன் ஒருவர் பெயரை ஒருவர் பச்சை குத்திக்கொண்டனர். சில மாதங்களிலேயே இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.மீண்டும் ‘ஐ' படம் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இப்போது 3 தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாலிவுட்டிலும் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. பிரபு தேவா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் ‘சிங் இஸ் பிளிங்' படத்தில் கிருத்தி சனூன் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் வெளியேறினார்.
அந்த வாய்ப்பு எமிக்கு கிடைத்துள்ளது. இப்படம் தனக்கு இந்தியில் திருப்புமுனையை ஏற்படுத்தி தரும் என நம்புகிறாராம். இது குறித்து எமி ஜாக்சன் கூறியது: லண்டனிலிருந்து சென்னைக்கு நடிக்க வந்தபோது தென்னிந்திய சினிமாவில் நல்ல பெயரை எடுத்து, நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணி இருந்தேன். அதையெல்லாம் மீறி மிகப்பெரிய படமாக ஐ எனக்கு கிடைத்தது. இப்போது பாலிவுட் கதவும் எனக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த காதல் கசப்பு அனுபவங்களை பற்றி இப்போது பேசி பயனில்லை. அதனால் அது பற்றி எதுவும் பேச விரும்பவில்லை.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.