↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சேலத்தில் கோவில் திருவிழாவிற்காக திரைக்கட்டி அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படம் திரையிட்டதால் இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் த்ரிஷா, அனுஷ்கா மற்றும் அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்தப் படம் “என்னை அறிந்தால்”
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவிற்காக இரவு 11 மணிக்கு மினி திரையில் புரஜெக்டர் மூலம் அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படம் திருட்டு விசிடி மூலம் திரையிடப்பட்டுள்ளது. பைரஸி போலீஸார் தகவல் அறிந்து கோவில் அருகே வந்து பார்க்க அதிர்ச்சி அடைந்தனர்.
டி.வி.டி, பிளேயர், புரஜக்டர், மினி திரை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்து சென்றனர் போலீஸார். பின்னர் விசாரனையில் சின்னசாமி மற்றும் குமார் இருவரும் சேர்ந்து இந்த திருட்டு வேலையைப் செய்துள்ளனர் என்பதை அறிந்து போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top