↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஃபேஸ்புக்கில் அதிகம் லைக் வாங்க ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 120 வயது ஆமை மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பைசல் ஷேக்(24). அவர் ஃபேஸ்புக்கில் அதிகம் லைக் வாங்க என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளார். இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவுக்கு சென்றுள்ளார். பூங்காவில் உள்ள தடுப்புகளைத் தாண்டிச் சென்று அங்கு உள்ள 120 வயது ஆமை மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

இந்த புகைப்படம் தீயாக பரவியது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பைசலை கைது செய்தனர். கடந்த மே மாதம் நடந்த சம்பவம் பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போடவே எடுத்தேன். அதற்கு எனக்கு நிறைய லைக்ஸ் கிடைத்தது என்றார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top