↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கடந்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இலங்கை அணியின் லசித் மாலிங்க மற்றும் இந்திய அணியின் ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ESPN Cricinfo இணையத்தளம் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்வதற்காக வருடாந்தம் நடத்தும் வாக்கெடுப்பில் இலங்கை, இந்திய வீரர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
ஆசிய வெற்றிக்கிண்ண சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் 56 ஓட்டங்களை கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய லசித் மாலிங்க ஒருநாள் சர்வதேச போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக பிரன்டன் மெக்கலமும், சிறந்த பந்துவீச்சாளராக மிச்ஷெல் ஜோன்சனும் தெரிவாகியுள்ளனர். ஒருநாள் சர்வதேச போட்டிகளின் சிறந்த துடுப்பாட்ட வீராக ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொன்டிங், இயன் செப்பல் மற்றும் ESPN Cricinfo இணையத்தளத்தின் செய்தியாளர்களும் அடங்கிய யூரர்கள் குழு வீரர்களை தெரிவு செய்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top