↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்த தென் ஆப்பிரிக்க அணி புதிய வியூகம் வகுத்துள்ளது.
உலகக்கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிரிஸ்டனும், மைக் ஹசியும் நியமிக்கப்படுள்ளனர்.
கேரி கிரிஸ்டன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்தவர். இவர் இந்திய அணி உலகக்கிண்ணம் வெல்ல காரணமாக இருந்த முக்கிய பயிற்சியாளர் ஆவார்.
அதே போல் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர். இவர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்காக என பிரத்யேக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த ஒரு போட்டிக்கு மட்டும் தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு பயிற்சி அளிக்கிறார்.
இந்நிலையில் இவர்கள் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா உலகக்கிண்ணம் வென்ற ரகசியங்கள் மற்றும் டோனியின் வியூகம் அனைத்தையும் தெரிவித்து, வரும் ஞாயிற்றுக்கிழமை போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணிக்கு ஆப்படிக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.
மெல்போர்ன் நகரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஒருவரிடம் பயிற்சியாளர்கள் உங்களிடம் என்ன தெரிவித்துள்ளனர் என்று கேட்டதற்கு, அவரோ சிரித்துக் கொண்டே ரவீந்திர ஜடேஜாவை போன்றே பந்து வீசுமாறு தெரிவித்தனர் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top