↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
‘என்னை அறிந்தால்’ படத்திற்கு ரசிகர்கள் தந்த உற்சாகத்தோடு தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்க தயாராகிவிட்டார் இயக்குனர் கௌதம் மேனன். அஜித் படத்தை ஆரம்பிக்க சில மாதங்கள் இடைவெளி இருந்ததால், அந்தப் படத்திற்கு முன்பே சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கத் தொடங்கினார் கௌதம் மேனன். படத்துக்கு கூட சட்டென்று மாறுது வானிலை என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. சிம்பு ஜோடியாக பல்லவி சுபாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சிம்பு படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன.
சிம்புவின் படத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார் கௌதம் மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இந்த படப்பிடிப்பில் சிம்புவை மிகவும் அழகான தோற்றத்தில் காட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய கெட்டப்புக்கு சிம்பு தயாராகி வருகிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top