↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹேராத் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது ஹேராத்தின் விரலில் ஏற்பட்ட காயத்தினால் அவர் தற்பொழுது சிகிச்சைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
அவரது இடது கை விரல்களுக்கிடையே தசை கிழிந்து இருப்பதால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக முழு உடல்தகுதி பெறுவது சிரமம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஹேராத்திற்கு பதிலாக சீக்குகே பிரசன்னாவை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் பணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இலங்கை, பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை, வருகின்ற 8ம் திகதி சிட்னியில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் முன்னணி பந்துவீச்சாளர் ஹேராத்தை இலங்கை அணி இழப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top