↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பெங்களூரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், மாணவி ஒருவரிடம் நிர்பயாவுக்கு நடந்தது போல உனக்கும் செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், கைப்பேசியில் பாலியல் அர‌ட்டைக்கு வர மறுத்த 10ம் வகுப்பு மாணவியை இவ்வாறு மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், தங்களுக்கு வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது மகளின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சிலர், தங்களுடன் பள்ளியில் ஓய்வு வேளைகளில் பாலியல் தொடர்பாக பேச வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி உள்ளனர்.

அவர்களின் செயலுக்கு உடன்பட மறுத்த என் மகளிடம் நிர்பயாவுக்கு நடந்தது போல உனக்கும் செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொலிசாரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top