↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
யுவராஜ்சிங் நல்ல வீரர்தான், ஆனால் அவரது இடத்தில் சுரேஷ் ரெய்னா தற்போது சிறப்பாகவே ஆடி வருகிறார் என்று கூறினார் இந்திய அணி கேப்டன் டோணி. உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர், யுவராஜ்சிங் சேர்க்கப்படாதது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. யுவராஜ்சிங்கை அணியில் சேர்க்காமல் விட்டதற்கு, கேப்டன், டோணிதான் காரணம் என்று, யுவராஜ்சிங் தந்தை வெளிப்படையாக தெரிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், 5வது வரிசையில் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா, சரிவர பேட்டிங் செய்யாமல், கொஞ்ச ரன்களிலேயே அவுட் ஆவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த இடத்தில் யுவராஜ்சிங்தான் பொருத்தமாக இருந்தார் என்றும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. அதிலும், நேற்றைய முக்கியமான ஆட்டத்தில் 22 ரன்களில் ரெய்னா அவுட் ஆனது அவருக்கு எதிரான கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது.
இதுபற்றி டோணியிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது: உலகின் பல்வேறு வீரர்களும் ஷாட் பிட்ச் பந்தில் அவுட் ஆகிவருகின்றனர். ஆனால், ஏதோ, ரெய்னா மட்டுமே அப்படி அவுட் ஆவதைப்போல மீடியாக்கள்தான் கிளப்பிவிடுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றை திரும்பி பார்த்தால் ஒரு விஷயம் புரியும். 5வது வீரராக களமிறங்கியவர்களில் பெரும்பாலானோர் சோபிக்க முடியாமலே போயுள்ளனர். அந்த வகையில் யுவராஜ்சிங், சிறப்பான வீரராக செயல்பட்டார்.
இப்போது யுவராஜ்சிங் இடத்தில், ரெய்னா சிறப்பாக ஆடி வருகிறார். இதற்கு முன்பு விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா போன்றோரும் ஐந்தாவதாக களமிறங்கியுள்ளனர். ஆனால் அவர்களால் சிறப்பாக ஆட முடியவில்லை. எனவே 5வது வீரராக சிறப்பாக ஆடிவரும் ரெய்னாவின் தன்னம்பிக்கையை யாரும் குலைத்துவிடக் கூடாது.
40வது ஓவர்களுக்கு மேல் களமிறங்கும் பேட்ஸ்மேனால் அதிக ரன்களை குவிப்பது இயலாத காரியம். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடிப்பது மட்டுமே அப்போது அவர்களின் வேலையாக இருக்கும். அப்படி அடித்து 20 அல்லது 25 ரன்களில் அவுட் ஆனால், அந்த பேட்மேனை பார்த்து ஃபார்மில் இல்லை என்று கூறிவிட முடியாது.
சுயநலமாக கடைசிவரை அவுட் ஆகாமல் நின்று கொண்டிருக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேவையில்லை. அணிக்கு தேவையான ரன்களை அடித்துவிட்டு அவுட் ஆனாலும் பரவாயில்லை. தற்போதைய காலமாற்றத்தில், எத்தனை ரன்கள் அடித்தாலும் அது போதாமல் போய்விடுகிறது. 300 ரன்கள் அடிக்கும் நிலையிருந்தால், கூடுதலாக ஐந்து ரன்களாவது அடிக்கவே நாங்கள் முயற்சி செய்கிறோம். இவ்வாறு டோணி கூறினார்.
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.