சிட்னியில் நாளை நடைபெறும் போட்டியில் இலங்கை அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இது தொடர்பாக சனத் ஜெயசூரிய கருத்து வெளியிடுகையில்,
அவுஸ்திரேலியாவுடனான மோதல் மிக முக்கியமானது. அந்த அணியை வீழ்த்தும் பட்சத்தில் இலங்கை வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இலங்கை அணியில் நல்ல மாற்றம் தெரிகிறது. வங்களாதேஷத்திற்கு எதிரான போட்டியில் சங்கக்காரா, டில்ஷனும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டில்ஷன், திரிமான்னவும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்.
இலங்கை அணியில் துடுப்பாட்டம் வலு வாக இருக்கிறது. அதே போல பந்துவீச்சில் மலிங்க, திசர பேரேரா சோபிக்க ஆரம் பித்துள்ளனர். நாங்கள் சரியான பாதையை நோக்கி பயணிக்கிறோம் என ஜெயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.