
நண்பேன்டா படத்தை முடித்த கையோடு உதயநிதி திருக்குமரன் அவர்களின் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் நடிக்க கருணாகரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
பிப்ரவரி 22ம் தேதி தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் கேரளாவில் முடிந்துள்ளது. இந்த தகவலை எமி ஜாக்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதோடு கருணாவுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கேரள மலையில், செங்குத்தான இடம் ஒன்றில் ஏறும்போது நடிகை எமி ஜாக்சன் தடுமாறி சறுக்கியபோது, நடிகர் கருணாகரன் அவருக்கு கைகொடுத்து தூக்கியிருக்கிறார். இதற்கு தான் எமி ஜாக்சன், கருணாகரனுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.