↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் டர்கம் கவுண்டியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற பொலிசார் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைத்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக 12 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஆடம் ஜான்சனுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்து பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை அவரது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சனை சஸ்பெண்ட் செய்வதாக சந்தர்லேண்ட் அணி அறிவித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சண்டர்லேண்ட் அணிக்காக 10 மில்லியன் பவுண்டுக்கு (ரூ.95 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆடம், தற்போது இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் சந்தர்லேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top