↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுத் தொகை, சம்பளம் என பல மடங்கு பணம் கிடைக்கிறது.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து வருகிறது.
இதில் ‘நடப்பு சம்பியன்’ இந்திய அணி, பட்டத்தை தக்க வைத்தால், பரிசு தொகையான ரூ. 26.8 கோடி, அணியின் 15 வீரர்களுக்கு தலா ரூ. 1.78 கோடி வீதம் பிரித்து தரப்படும்.
லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் கிண்ணம் வென்றால், பரிசுத் தொகை ரூ. 28.68 கோடி வரும். அப்போது, 15 வீரர்களுக்கு தலா ரூ. 1.91 கோடி கிடைக்கும்.
ஒவ்வொரு போட்டியன்று களமிறங்கும் 11 வீரர்களுக்கு சம்பளமாக தலா ரூ. 4 லட்சம் தரப்படும்.
உலகக்கிண்ணத்திற்கே வீரர்களுக்கு இவ்வளவு பரிசு தொகை கிடைக்கிறது என்றால், அடுத்து வரவிருக்கும் ஐ.பி.எல் தொடர்களில் தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கு உலகக்கிண்ணத்தில் கிடைக்கும் பரிசுத் தொகையை விட 3 மடங்கு பணம் கிடைக்கும்.
ஐ.பி.எல் தொடரை எடுத்துக் கொண்டால் அணிகள் குறைந்தது 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும். இவர்களுக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 12.5 கோடி வரை தரப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top