↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்தியா என்னதான் தோல்வியுறாத அணியாக இருந்தாலும், கேப்டன் டோணிக்கு, அணியின் ஒரு வீரர் மீது தொடர்ந்து அதிருப்தி இருந்து வருகிறது. இந்தியா தனது முதல் மூன்று லீக் போட்டிகளிலும் வென்ற நிலையில், நான்காவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நேற்று பலப் பரிட்சை நடத்தியது. குறைந்த ஸ்கோரை எட்டிப் பிடிப்பதற்குள் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் கேப்டன் டோணியின் பொறுப்பான ஆட்டத்தால், ஆட்டத்தில் வெற்றி பெற்று, இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருந்தாலும், இந்த அனைத்து போட்டிகளிலுமே ஒரு பேட்ஸ்மேன் மட்டும் சோபிக்க தவறி வருவது டோணிக்கு கவலையளிக்கிறது.
நேற்று போட்டி முடிந்த பிறகு தனது மனக்குறையை செய்தியாளர்களிடம் கொட்டி தீர்த்து விட்டார் டோணி.
ரவீந்திர ஜடேஜா தனது பேட்டிங் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அணி அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. எனவே களத்தில் எப்படி ஜொலிக்கிறோம் என்பதை ஜடேஜா எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம்.
ஜடேஜா திறமையான பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தியாவில் ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியில் 300 ரன்கள் குவித்த ஜடேஜாவை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால் ஷாட் பிட்ச் பந்தில் அவர் தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். அதுபோன்ற பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆடிவருகிறார்கள். அதேபோல ஜடேஜா தனக்கான பாணியை கண்டுபிடிக்க வேண்டும்.
ஜடேஜாவுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்கும் எண்ணமில்லை. ஏனெனில் 2 ஸ்பின்னர்கள் இருப்பது அணிக்கு பலமாகும். 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால், ஆட்டத்தில் நேரம் வீணடிக்கப்பட்டு, கேப்டனுக்கு தண்டனை கிடைக்கிறது. எனவே அந்த ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை. இவ்வாறு டோணி கூறினார்.
ஜடேஜா பாகிஸ்தானுக்கு எதிராக 3 ரன்களும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ரன்களும் எடுத்த நிலையில், நேற்றைய போட்டியில் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். டோணி மறுமுனையில் வெற்றிக்காக போராடிய நிலையில், ஜடேஜா தனது விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு சென்றார். இறுதியில் அஸ்வின்தான், டோணிக்கு பார்ட்னர்ஷிப் தந்து அணியை மீட்டார். யு.ஏ.இ அணியுடனான போட்டியின்போது ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
dhoni
»
sports
»
sports.tamil
»
worldcup
» அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஒரு வீரர் மீது மட்டும் டோணிக்கு அதிருப்திதானாம்!
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.