↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான 'சண்டமாருதம்' படம் சமீபத்தில் ரிலீஸாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இயக்கிய மற்றொரு படமான 'ரொம்ப நல்லவண்டா நீ' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த படம் குறித்து இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறியபோது, 'இந்த படம் ஒரு வித்தியாசமான களத்தில் எடுக்கப்பட்டது. ஒரே வாரத்தில் அதாவது ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை முடியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகன் மிர்ச்சி செந்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையை இன்னொருவரிடம் கூறுகிறார். அப்படி கூறியதால் செந்தில் ஒரு வாரத்தில் சந்திக்கும் பிரச்சனையை காமெடி மற்றும் த்ரில் கலந்து கொடுத்துள்ளதாக கூறினார்.

மேலும் இந்த கதையை படமாக்கியது தனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்ததாக ஏ.வெங்கடேஷ், கூறியுள்ளார். மிர்ச்சி செந்தில், ஸ்ருதிபாலா, சோனா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ஆகியோர்களுடன் ஏ.வெங்கடேஷும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.வெங்கடேஷ் ஏற்கனவே 'அங்காடித்தெரு' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல பெரிய நிறுவனங்கள் இந்த படத்தை வாங்கி வெளியிட தயாராக இருந்தும் இந்த படத்தின் மீது உள்ள நம்பிக்கை காரணமாக தயாரிப்பாளர் சர்வஜீத் சொந்தமாகவே ரிலீஸ் செய்வதாக கூறியதாகவும் ஏ.வெங்கடேஷ் தெரிவித்தார். மார்ச் 6ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்த படம் தயாரிப்பாளரின் நம்பிக்கையை காப்பாற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top