↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசு பெற்ற ஈழத்து சிறுமி ஜெசிக்காவுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. தனக்கு பரிசாக கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை அதே மேடையில் ஈழம் மற்றும் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக வழங்குவதாக ஜெசிக்கா அறிவித்தார்.

ஜெசிக்காவின் இந்த அறிவிப்பு அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் ஜெசிக்காவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்த நடிகர் சூர்யா, தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அவருக்கு தகவல் அனுப்பியுள்ளார். அவருடைய அழைப்பை ஏற்று சூர்யாவை நேரில் சந்தித்த ஜெசிக்காவுக்கு சூர்யா பாராட்டு தெரிவித்ததோடு, இன்னும் பல சாதனைகள் புரிய அவரை நேரில் வாழ்த்தினார். மேலும் தனது மனைவி ஜோதிகா கொடுத்த பரிசையும் ஜெசிக்காவிடம் சூர்யா கொடுத்தார்.

சூர்யாவை சந்தித்த நிகழ்ச்சி தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று ஜெசிக்கா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top