↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான 'கார்த்திகேயா' என்ற படத்தின் இயக்குனர் சாண்டு மாண்டடி ( Chandoo Mondeti) அடுத்து மீண்டும் அதே இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த புதிய படத்தின் மூலம் டோலிவுட்டின் முன்னணி இளம் நாயகன் நாக சைதன்யா முதன்முதலில் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நாக சைதன்யாவை சந்தித்த இயக்குனர் ஒரு வரி கதையை கூறியதாகவும், அந்த கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆன நாகசைதன்யா, உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தந்தை-மகன் உறவு குறித்த இந்த படம் செண்டிமெண்ட் கலந்த த்ரில் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா சென்னையில்தான் வளர்ந்தவர் என்பதால் தமிழ் பேசுவதில் எவ்வித சிரமும் இருக்காது என்றும், நாக சைதன்யாவுக்கு தந்தையாக நடிக்க பிரபல நடிகர் ஒருவரை தேர்வு செய்ய இருப்பதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர். 

நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தமிழில் 'ரட்சகன்' என்ற படத்தில் நடித்ததோடு அவருடைய பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top