↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

போடா போடி' படத்திற்கு பின்னர் கடந்த மூன்று வருடங்களாக எந்த திரைப்படத்தையும் வெளியிடாமல் இருந்தாலும் சிம்பு அடிக்கடி தலைப்பு செய்திகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றார். 

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய சிம்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னுடைய படம் வெளிவராததற்கு தான் மட்டும் காரணமில்லை என்றும், ஆனால் இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பேட்டியில், 'எனக்கு மேல இருந்தவர்கள் கீழே போய்ட்டாங்கன்னு எனக்குத் திமிரோ, சந்தோஷமோ இல்லை. எனக்கு அப்புறம் வந்தவர்கள் என்னைவிட மேலே போய்ட்டாங்கன்னு பொறாமையோ, வருத்தமோ இல்ல. தனியாக நிரூபிக்க எதுவுமே இல்லைங்கிறதுதான் என் மனநிலை. எதுவுமே இல்லாத ஜீரோதான் நான்" என்று தத்துவம் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒரு காலத்தில் ரஜினிகாந்த் போல பெரிய ஸ்டாராக ஆசைப்பட்டதாகவும், ஆனால் தற்போது அப்படிப்பட்ட ஆசை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். எனக்கு யாரை பிடிக்குமோ அவர்களே என்னை ரசிக்கும்படி நடித்து பேர் வாங்க வேண்டும் என்பதே தனது ஆசை' என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு', வாலு ஆகிய படங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வேட்டை மன்னன் படத்தையும் அவர் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top