↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த 5ஆம் தேதி வெளியான அஜீத்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றி தன்னைவிட கவுதம் மேனனின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என்கிற ரீதியில் அஜீத் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'என்னை அறிந்தால்' படம் ரிலீஸான முதல் நாளில் தியேட்டர்களில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த கவுதம் மேனன் அஜீத்துக்கு போன் செய்து அந்த விஷயத்தை கூறியபோது, அஜீத் மிகவும் கூலாக, '"அதை விடுங்கள், உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது சரியாகிவிட்டதா? இந்த படத்தின் வெற்றியின் மூலம் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?" என்று அஜித் கவுதம் மேனனிடம் கேட்டாராம்.

மேலும் "படம் வெற்றி, தோல்வி என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சந்தோஷமாக குடும்பத்துடன் இருங்கள். எதற்கும் கவலை வேண்டாம்" என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாராம் அஜித். 

அஜீத்தின் இந்த அணுகுமுறை தனக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்ததாகவும், திரையுலகில் இப்படியும் ஒரு மனிதர் இருக்கின்றாரா என்று கவுதம் மேனன் வியந்ததாகவும் அவருடைய நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top