கடந்த ஆண்டு தெலுங்கானா மாநில முதல்வராக பதவியேற்ற சந்திரசேகர ராவ், ஐதராபாத் நகரை உலகத்தரம் வாய்ந்த நகராக மாற்ற தீவிர முயற்சி செய்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் (Dallas ) நகரை போலவே ஐதராபாத் நகரையும் மாற்ற வேண்டும் என்பதே முதல்வரின் குறிக்கோளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஐதராபாத் நகரின் பிராண்ட் அம்பாசிடராக ஏற்கனவே பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இருந்து வரும் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவையும் கூடுதல் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்ய தெலுங்கானா முதல்வர் விரும்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
முதல்வரின் நம்பிக்கைக்குரிய நபர்கள் மகேஷ்பாபுவிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் மகேஷ்பாபுவிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கானாவில் விரைவில் முனிசிபல் தேர்தல் நடைபெற உள்ளதால் மகேஷ்பாபு ரசிகர்களின் ஓட்டுக்களை கவர்ந்திழுக்க ஆளுங்கட்சி ராஜதந்திரம் இது என்றும் கூறப்படுகிறது. ஐதராபாத் நகரின் பிராண்ட் அம்பாசிடராக பணிபுரிய மகேஷ்பாபு ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் ஐதராபாத் நகரின் பிராண்ட் அம்பாசிடராக ஏற்கனவே பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இருந்து வரும் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவையும் கூடுதல் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்ய தெலுங்கானா முதல்வர் விரும்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
முதல்வரின் நம்பிக்கைக்குரிய நபர்கள் மகேஷ்பாபுவிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் மகேஷ்பாபுவிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கானாவில் விரைவில் முனிசிபல் தேர்தல் நடைபெற உள்ளதால் மகேஷ்பாபு ரசிகர்களின் ஓட்டுக்களை கவர்ந்திழுக்க ஆளுங்கட்சி ராஜதந்திரம் இது என்றும் கூறப்படுகிறது. ஐதராபாத் நகரின் பிராண்ட் அம்பாசிடராக பணிபுரிய மகேஷ்பாபு ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.