↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கவுதம் மேனன் இயக்கிய அஜீத்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸாகி இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கவுதம் மேனன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 'என்னை அறிந்தால்' படத்தின் படப்பிடிப்பின் இடையே நடைபெற்ற மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

ஒருமுறை தனக்கே தெரியாமல் அஜீத் தன்னுடைய வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும், ஒரு பெரிய மாஸ் ஸ்டார் என்ற கர்வம் இல்லாமல் வெகு இயல்பாக அவர் பேசியதை தனது தாயார் பெருமையாக தன்னிடம் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

அடுத்தவர்களின் வீட்டிற்கு சென்றால் அரைமணி நேரத்தில் அந்த வீட்டில் இருந்து எப்படி கழன்று கொள்வது என்று நானே பல சமயங்களில் நினைத்துள்ளேன். ஆனால் என்னுடைய வீட்டில் எனது தாயாரிடம் எவ்வித சங்கடமும் இன்றி அவர் ஒன்றரை மணி நேரம் இருந்ததை எண்ணி வியப்படைந்தேன்' என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

கவுதம் மேனனுடன் 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்த அருண் விஜய்யும் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top