↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மீண்டும் வில்லனாக நடிக்க மாட்டேன்-சரத்குமார்

சரத்குமார் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்‘. ஏ.வெங்கேடஷ் இயக்குகிறார். இதுபற்றி சரத்குமார் கூறும்போது,‘தீவிரவாதத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள படம். ஹீரோ, வில்லன் என இருவேடம் ஏற்கிறேன். வில்லன் கதாபாத்திரத்தை நியாயப்படுத்தவில்லை. ஆனால் காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஓவியா, மித்ராகுரியன் நடித்திருக்கின்றனர்.தமிழ், கன்னடத்தில் 20ம் தேதி 250க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. தவிர தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான், சீனா உள்ளிட்ட 7 மொழிகளிலும் வெளிவரவுள்ளது. பல மொழிகளில் ரிலீஸ் செய்வதற்கு காரணம் தமிழ் படத்தின் மார்க்கெட்டை விரிவடையச் செய்வதற்கான முயற்சி. வில்லனாக தொடர்ந்து நடிப்பீர்களா என்கிறார்கள்? அந்த எண்ணம் இல்லை. அடுத்து மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.வெங்கடேஷ் படங்களில் நடிக்க உள்ளேன்.இவ்வாறு சரத்குமார் கூறினார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top