↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதால் இந்திய அணித்தலைவர் டோனி மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த இன்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இதன் காரணமாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா அபாரமாக வெற்றியடைந்தது.
சமீப காலமாக இந்திய அணியின் சொதப்பல் ஆட்டம் கவலையளிப்பதாக தெரிவித்திருந்த அணித்தலைவர் டோனி இந்த வெற்றியின் மூலம் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றி குறித்து டோனி கூறுகையில், இந்திய அணியின் துடுப்பாட்டம் மகிழ்ச்சி தருகிறது. ஏனெனில், அடிலெய்டில் முதலில் துடுப்பெடுத்தாடி இந்த இலக்கை எட்டுவது எளிதல்ல.
கோஹ்லி, தவான் 'பார்ட்னர்ஷிப்' சிறப்பாக அமைந்தது. ரெய்னாவும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக அமைந்தது. இந்திய ரசிகர்கள் பலர் ஆதரவு தந்ததும், வெற்றிக்கு உதவியது என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top