
மகிந்த ஆட்சியில் இருந்த காலத்தில் , பல மோட்டார் சைக்கிளை ரூபா 50,000 ஆயிரத்திற்கு வழங்கியுள்ளார். ஆனால் அவற்றின் உண்மையான பெறுமதி 1 லட்சத்தி 90,000 ஆயிரம் ரூபா என்று கூறப்படுகிறது. இதனால் திறைசேரிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரச பணத்தை எடுத்து , தனது செல்வாக்கை உயர்த்த இவ்வாறு அடிமாட்டு விலைக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியுள்ளார். ஆனால் அதற்கும் ஆப்பு வைத்தது மைத்திரி அரசு.
அவ்வாறு மோட்டார் சைக்கிள்களை பெற்ற உத்தியோகஸ்தர்கள். வெளிக்கள உத்தியோகஸ்தர் பதவியில் இருந்து விலகினாலோ அல்லது வேறு வேலைக்கு மாற்றல் ஆகி சென்றாலோ மோட்டார் சைக்கிளுக்கு உரிய சந்தை பெறுமதியினை செலுத்த வேண்டும் என திறைசேரியின் திட்டமிடல் பிரிவால் மாவட்ட செயலகங்களுக்கு சுற்று நிரூபம் அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது. ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள் 1 லட்சத்து 94ஆயிரத்து 920 ரூபாய் எனவும் பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் 1 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் பதவி விலகி செல்பவர்கள் அல்லது வேலை மாற்றல் ஆகி செல்பவர்கள் முன்னர் செலுத்திய 50 ஆயிரம் ரூபாயினை தவிர்த்து மிகுதி பணத்தினை செலுத்த வேண்டும் என அந்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மகிந்தரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி ஜாலியாக சுற்றித்திரிந்துவிட்டு , பின்னர் வேறு வேலைக்கு மாறிய நபர்கள் தற்போது ஆட்டம் கண்டுள்ளார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.