↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தில் இருந்து வந்த ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில், தற்போது அவருடைய குடும்பத்தில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர் அறிமுகமாக உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன் அசார் காசிப் என்பவர் தற்போது இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் இசையமைத்த 'கண்ணாலே' என்று தொடங்கும் பாடலின் வீடியோ ஒன்று காதலர் தினமான இன்று வெளியாகவுள்ளது.

இந்த டூயட் பாடலை ஜாவித் அலி மற்றும் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பாடியுள்ளனர். பாடகர் ஜாவித் அலி, ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள காசிப் அலி, ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் சிறுவயது முதலே இருந்து வந்துள்ளதால் இசை மீது ஆர்வம் ஏற்பட்டு, கம்போஸ் செய்யும் வழிமுறைகளை தனது மாமாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இவர் கல்லூரியிலும் பல இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. மாமா ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சகோதரர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தங்கள் குடும்பத்தின் புது இசையமைப்பாளருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் ஆசியையும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top