↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றிருப்பது பெருமிதம் அளிக்கிறது என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
உலகக்கிண்ண தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி, 6வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றை தக்க வைத்தது. ஆனால் இந்த வரலாறு விரைவில் மாறலாம் என டோனி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கி இருப்பதன் மூலம் கொஞ்சம் நெருக்கடி குறைந்திருப்பதாக நினைக்கிறேன்.
ஒட்டுமொத்த ஒருநாள் போட்டியில் நமக்கு எதிராக பாகிஸ்தான் தான் அதிகமான (72–51) வெற்றிகளை பெற்றிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் பார்த்தால் அவர்கள் மிகச்சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை.
எனவே என்றாவது ஒருநாள் அல்லது விரைவில் இந்த சாதனையை முறியடித்து விடுவார்கள். அது அடுத்த உலகக்கிண்ணத்தில் கூட நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top