↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஐபிஎல் ஏலத்தில் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் சங்ககாரா, ஜெயவர்த்தனே, ஆம்லா போன்றோரை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில் இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் கூட விளையாடாத கர்நாடகாவை சேர்ந்த கே.சி.கரியப்பா என்ற சுழற்பந்து வீச்சாளரை ரூ.2.40 கோடி கொடுத்து கொல்கத்தா நைட் நைடர்ஸ் அணி வாங்கியுள்ளது டாக் ஆப் தி டவுன் ஆகியுள்ளது.
8வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அப்போது கர்நாடகாவை சேர்ந்த கரியப்பாவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தாவும், டெல்லியும் கடுமையாக போட்டிபோட்டன. ரூ.10 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த கரியப்பாவை போட்டி போட்டே காஸ்ட்லியாக்கிவிட்டனர் இவ்விரு அணிகளும். கடைசியில் கொல்கத்தாவுக்காக ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் கரியப்பா.
இத்தனைக்கும் கரியப்பா இதுவரை முதல் தர போட்டியில் கூட விளையாடியது கிடையாது. ஆனால் கர்நாடக பிரீமியர் லீக் எனப்படும் உள்மாநில அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்தவராகும். 20 வயதான கரியப்பா நேற்றைய ஏலத்தின் மூலம் இந்தியா முழுவதிலும் பிரசித்தி பெற்றுவிட்டார்.
இதுபற்றி அவர் என்ன சொல்கிறார் தெரியுமா.. "ஒருநாள் கொல்கத்தா அணியின் வீடியோ ஆய்வாளர் ஸ்ரீகாந்த் என்னை அவர்கள் முகாமுக்கு அழைத்துச் சென்றார். அங்கு கம்பீர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பவுலிங் ஆலோசகர் வாசிம் அக்ரமும் அங்கு இருந்தார். இவர்களை பார்த்ததுமே எனக்குள் பரவசமும், பதற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து நான் பவுலிங் போட கம்பீர் பேட்டிங் செய்தார். இதை ஆய்வு செய்து பார்த்த வாசிம் அக்ரம், உங்கள் பந்து வீச்சு அருமையாக உள்ளது. பிட்னஸ் விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் வையுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். இதன்பிறகுதான் ஐபிஎல் ஏலப்பட்டியலில் எனது பெயரும் இருந்தது. எனக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.10 லட்சம் அளவுக்கு விலைபோவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கோடிக்கணக்கில் கொடுத்து கொல்கத்தா வாங்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எனது கனவு நனவாகியுள்ளது. எனது பெற்றோர்கள் எனக்காக ஏகப்பட்ட தியாகங்கள் செய்துள்ளனர். எனக்கு கிடைத்துள்ள பணத்தை கொண்டு அவர்களுக்காக ஒரு வீடு வாங்குவேன். இவ்வாறு கரியப்பா கூறினார்.
மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரைன், இலங்கையின் அஜந்தா மென்டிஸ் போன்றோர் எந்த மாதிரி ஸ்பின்னர்கள் என்பதை இதுவரை எந்த பேட்ஸ்மேனாலும் கணிக்க முடியவில்லை. அதேபோன்றவர்தான் கே.சி.கரியப்பா என்கின்றனர் அவரது ஆப்-ஸ்பின் பவுலிங்கை பற்றி அறிந்தவர்கள். எந்த பந்து எந்த திசையில், எந்த கோணத்தில் சுழன்று செல்லும் என்று கணிக்க முடியாதபடி பந்து வீசுபவராம் கரியப்பா. இவ்வாண்டில் கொல்கத்தாவின் சர்ப்ரைஸ் இவர்தான் என்கின்றனர்.
Home
»
ipl
»
sports
»
sports.tamil
» எந்த பந்து எந்த திசையில், எந்த கோணத்தில் சுழன்று செல்லும் என்று கணிக்க முடியாதபடி பந்து வீசபோகும் இந்திய வீரர்
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.