↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது விமானநிலையத்தில் ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட நடிகை பூனம் பாண்டேவால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 15ம் திகதி நடந்த உலகக்கிண்ண லீக் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும்போட்டி நடந்தது. அப்போது இந்தப் போட்டியை பலரும் தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர்.
அந்நாளில் நடிகை பூனம் பாண்டே ஐதராபாத்தில் ஒரு ஹொட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு மும்பை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியை பயணிகள் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அனல் பறக்கும் அந்த மோதல் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது. அந்த நேரம் அங்கு வந்த பூனம் பாண்டே ரசிகர்களோடு ரசிகராக நின்றுக்கொண்டு நடனம் ஆடி அமர்க்களப்படுத்தினார்.
அங்கு நின்றிருந்த பயணிகளும் பூனம் பாண்டேயின் கும்மாளத்தை கண்டு நடனம் ஆடத் தொடங்கினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதையறிந்த விமான நிலைய பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த பூனம் பாண்டேவை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இவர் கடந்த 2011ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது நினைவிருக்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top