↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் 'கிட்னா' படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை மஹிமா, தற்போது அகத்திணை' என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.

தந்தை-மகள் பாசத்தை வித்தியாசமான கோணத்தில் காண்பிக்கும் வகையில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தந்தை கேரக்டரில் ஆடுகளம் நரேனும், மகள் கேரக்டரில் மஹிமாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குனர் மருது அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'இந்த படம் ஒரு உணர்ச்சிமயமான காதல் கதை. மஹிமா கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். 

ஒரு தந்தை தனது மகள் மீது அளவுக்கதிமான பாசம் வைத்ததால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இதில் கூறியிருப்பதாகவும் மருது கூறியுள்ளார்.

காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடைபெற்றதாகவும், இந்த படத்திற்காக தந்தை-மகள் பாசத்தை கண்ணீருடன் உணர்த்தும் வகையில் வைரமுத்து ஒரு அற்புதமான பாடலை எழுதி கொடுத்துள்ளதாகவும் மருது மேலும் கூறியுள்ளார்.

சிவாஜி-நதியா நடித்த 'அன்புள்ள அப்பா' படத்திற்கு பின்னர் வரும் தந்தை-மகள் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தும் திரைப்படம் 'அகத்திணை' தான் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் வர்மா என்ற நடிகர் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top