↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
படப்பிடிப்பில் பில்லியர்ட்ஸ் விளையாடும் வெங்கட் பிரபு
‘சென்னை 28’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சரோஜா’ படத்தை இயக்கினார். இதை கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதற்கு சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் நான்கு இளைஞர்கள் சந்திக்கும் சிக்கல்களை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார்.

பின்னர் அஜீத்தை வைத்து ‘மங்காத்தா’ என்னும் ஹிட் படத்தை கொடுத்தார். இப்படப்பிடிப்பின் போது படக்குழுவினர் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவார்களாம். அப்போது கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

அதுபோல் தற்போது வெங்கட் பிரபு, சூர்யாவை வைத்து ‘மாஸ்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடந்து வருகிறது. மறுபக்கம் படப்பிடிப்பின் இடைவேளையின்போது பில்லியர்ட்ஸ் விளையாடுகிறாராம் வெங்கட் பிரபு. இவர் விளையாடுவது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top