↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஞ்சான், கத்தி படங்களுக்கு முன்பு வரை சம்பள விசயத்தில் அடக்கிவாசித்து வந்த சமந்தா, அதையடுத்து 2 கோடி வரை சம்பளம் கேட்பதாக செய்தி பரவியுள்ளது. ஆனால், இதுகுறித்து சமந்தா விடுத்துள்ள செய்தியில், நடிகர்களுக்காக மட்டுமே ஒரு காலத்தில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்தனர். ஆனால், இப்போது நடிகைகளுக்காகவும் வருகிறார்கள். குறிப்பாக, இளவட்ட ரசிகர்கள் நடிகைகளின் கிளாமரான நடிப்பை பார்த்து ரசிக்கவே வருகிறார்கள். அதனால் இப்போது நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகி விட்டோம். அதனால்தான், சம்பளத்தை கூடுதலாக கேட்கிறேன் என்று கூறியுள்ளார் சமந்தா.

மேலும், என்னைப்பொறுத்தவரை எனக்கு பர்பார்மென்ஸ் பண்ணுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள கதைகளில் நடிப்பதற்கு நான் கறார் செய்வதில்லை. முடிந்தவரை சம்பளத்தை குறைத்துக்கொள்கிறேன். அதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் என்றால் பெரிய அளவில் சம்பளத்தை குறைப்பேன். காரணம், அந்த மாதிரி கதைகளில் நடிக்கும்போது எனக்கு திருப்தி கிடைக்கிறது. அதேசமயம், கிளாமராக நடிப்பது மற்றவர்களுக்காகத்தான். அதில் எனக்கு எந்த திருப்தியும் கிடையாது. முழுக்க முழுக்க கமர்சியலை முன்வைத்து அப்படி நடிப்பதால், கூடுதல் சம்பளம் கேட்கிறேன் என்று விளக்கமளித்துள்ளார் சமந்தா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top