↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற வேன் டிரைவரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை அருகே தண்டராம்பட்டு அருகே உள்ள சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சிகாமணி என்பவருக்கு தனம், பரமேஸ்வரி என இரண்டு மனைவிகள்.

இரண்டாவது மனைவி பரமேஸ்வரிக்கு சுகுணா (15), அபினயா (11) என இரண்டு மகள்களும், சதீஷ் (8) என்கிற மகனும் உள்ளனர். சிகாமணி தனது முதல் மனைவி தனத்துடன் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி தனது 3 குழந்தைகளுடன் சேரந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மினி வேன் டிரைவர் பரந்தாமன் (42) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த பரந்தாமன் பரமேஸ்வரியின் வீட்டுக்கு சென்று, அவரை தனது ஆசைக்கு இணங்கும்படி அழைத்துள்ளார். ஆனால், குழந்தைகள் இருப்பதால் பரந்தாமனின் ஆசைக்கு இணங்க மறுத்துள்ளார் பரமேஸ்வரி. இதனால் ஆத்திரம் அடைந்த பரந்தாமன் அங்கிருந்த மண்எண்ணெய் எடுத்து பரமேஸ்வரி மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் பரமேஸ்வரியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது அருகில் இருந்த பரமேஸ்வரியின் மகள் அபினயா மீதும் தீ பிடித்துள்ளது.

இருவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தார், அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பரமேஸ்வரி சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பரந்தாமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top