↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு சென்டிமென்ட் உண்டு. சென்டிமென்ட் பார்க்காமல் ஒரு சிலர் மட்டும்தான் இருப்பார்கள். அதிலும் திரையுலகத்தில் இருக்கும் சென்டிமென்ட் பற்றி கேட்கவே வேண்டாம்.

கத்தி படத்திற்கு பிறகு விக்ரம் ஜோடியாக எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்து தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதன் பிறகு மீண்டும் விஜய் ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ராஜா ராணி படத்திற்குப் பிறகு அட்லீ இயக்க உள்ள அடுத்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளாராம். ஆனால், இது பற்றி சமந்தா இதுவரை வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லையாம்.

சமந்தா தன் சமூக வலைத்தளத்தில் கூறியவை

இந்த வருடம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. படக் குழுவினர், கதைகள், கதாபாத்திரங்கள், கனவுக்கும் மேலாக நடக்கும் விஷயங்கள் என எல்லாமே ஸ்பெஷலானது.

என்னுடைய மோசமான சென்டிமென்ட் என்னவென்றால் ஒரு படம் ஷுட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னால் அந்தபடத்தைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன். இப்போது கூரை மீது ஏறி நின்று கத்த வேண்டும் போல் உள்ளது. நானும் இந்தப் படத்தின்............ என முற்றுப் பெறாத வாக்கியத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி சமந்தா துள்ளிக்குதிப்பதற்கு காரணம் விஜய் படம்தானா அல்லது அஜித் படமா என்பது இனிமேல் தான் தெரிய வரும் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top