↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கேரள மாநிலத்தில் 50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது.
கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன்( 58), இவரது மனைவி சுஜாதா(50).
இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1ம் திகதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

திருமணமாகி 28 ஆண்டுகள் முடிந்த நிலையில், சுஜாதா கர்ப்பமானார். அவரது 28–வது திருமண நாளன்று பிரசவம் நடந்தது.
இதில், 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தன. தாயும், 3 குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
தற்போது குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளன. 50 வயதுக்கு பிறகு தனக்கு 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top