↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய ரசிகை ஒருவர் ரெய்னாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென, இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு வெளியே காத்துக் கொண்டுள்ளார்.
உலகக்கிண்ணத் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அதிரடியில் மிரட்டிய ரெய்னா சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
இவரது ஆட்டத்தை பார்த்து அசந்து போன வயிஷ்னவி என்ற ரசிகை அவர் தங்கி இருக்கும் ஹொட்டலுக்கே கிளம்பி சென்று விட்டார்.
கையில் `Raina, make me your dulhaniya’ (என்னை உங்களுடைய மணப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளுங்கள்) என்று எழுதிய ஒரு பேனருடன் இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் ஹொட்டலுக்கு வெளியே ரெய்னாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து வய்ஷ்னவி கூறுகையில், நான் 2 மணி நேரமாக இங்கு ரெய்னாவின் வருகைக்காக காத்துக் கிடக்கிறேன். காவலாளியிடம் அவர் எப்போது வருவார் என்று கேட்டுப்பார்தேன். அவர் என்னை உள்ளே விட மறுத்து விட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் எனது ஆதரவு எப்போதும் ரெய்னாவிற்கு உண்டு என்றும், இந்தியா கண்டிப்பாக இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top