↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
‘வீட்டுக்கு வர்றவங்களை அன்பா, ‘வாங்க சாப்பிடலாம்’னு கூப்பிடுறது தமிழனோட மரபு. அதனால்தான் என் ஓட்டலுக்கு அப்படியொரு பெயரை வச்சேன்’ என்று நடிகரும் தொழிலதிபருமான ஆர்.கே சொன்னபோது, நல்லா சுவையா அழகா சொன்னாருப்பா… என்று சந்தோஷமானது அசைவ விரும்பிகளின் நாக்கு! மதுரை ராமநாதபுரம் ஏரியாவிலிருந்நு கைப்பக்குவம் கொண்ட சமையல்காரர்கள் வரவழைக்கப்பட்டு சுட சுட வித விதமான ஐட்டங்கள் சமைக்கப்பட்டன. தி.நகரில் அமைந்திருக்கும் அந்த ஓட்டலில் சாப்பிட்டவர்களின் ஏப்பம், அவரது இன்னொரு பிராஞ்ச் ஓட்டலான சாலிகிராமம் ‘வாங்க சாப்பிடலாம்’ பிராஞ்ச்சில் எதிரொலிக்கிற அளவுக்கு பாராட்டுகள்.
எல்லாம் கொஞ்ச நாளைக்குதான். அதற்கப்புறம் ஒரு நாள் தி.நகர் ஓட்டலுக்கு மூடுவிழாவே நடத்திவிட்டார் ஆர்.கே. அங்கு இயங்கி வந்த உடற்பயிற்சி நிலையமும் கூட அண்மைகாலமாக திறக்கப்படவில்லை.
இந்த நேரத்தில்தான் சீக்கு வந்த கோழிக்கு சீமெண்ணை அபிஷேகம் பண்ணிய மாதிரி மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்! ஓட்டலை விற்றுவிட்டாராம் ஆர்.கே. அதை வாங்கியிருப்பவர் யார் என்று நினைக்கிறீர்கள்? நம்ம புலி விஜய்தான். சுமார் 23 கோடி ரூபாய்க்கு இந்த ஓட்டல் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படியே இன்னொரு எக்ஸ்ட்ரா தகவல். விஜய்யை வைத்து படம் தயாரிக்க கால்ஷீட் கேட்டு வருகிறார் ஆர்.கே. அவருக்கு தரப்போகும் சம்பளத்தின் ஒரு பகுதியாகதான் இந்த ஓட்டல் கைமாறியிருப்பதாகவும் சொல்கிறார்கள். எது எப்படியோ? விஜய் வாங்கினால், அந்த இடத்தில் பிரமாதமான ஒரு கல்யாண மண்டபம் வரும் என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top