↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரித்தானியாவில் பிறந்த ஏழே வாரத்தில் பெண் குழந்தையொன்று, ஐலவ்யூ சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் உறையவைத்துள்ளது.
பிரித்தானியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கில்பர்னில்(Kilburn) வசித்து வரும் அலி சுபி(Ali Sufi Age-25) என்ற இளைஞருக்கு, கடந்த 7 வாரங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இவர் ஒருநாள் மதியம் தனது குழந்தை லிட்டில் அரியானா சுபியை(Ariana Sufi) தூங்க வைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது குழந்தையிடம் "ஐ லவ் யூ"(I Love you) என்ற வார்த்தையை அவர் கூற, ஆச்சர்யப்படுத்தும் வகையில் குழந்தையும், ஐ லவ் யூ என திரும்ப கூறியுள்ளது.
இதை அலிசுபி தன் மனைவி பாத்திமாவிடம்(Fatima Age-22) கூறியபோது, அவர் நகைச்சுவை செய்வதாக தான் பாத்திமா முதலில் கருதியுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் குழந்தை பேசும் வீடியோவை கண்டதும் பாத்திமா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்
தற்போது பிறந்து 12 வாரங்கள் ஆன பின்பும், குழந்தை தொடர்ந்து தனியாக பேச முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top