↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரித்தானியாவில் பணி நேரத்தில் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்த 3 மூத்த நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவை சேர்ந்த மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுலெஸ்(Timothy Bowles), குடியுரிமைத்துறை நீதிபதி வாரென் கிராண்ட்(Warren Grant), மாவட்ட துணை நீதிபதி மற்றும் பதிவாளரான பேட்டர் புல்லக்(Peter Bullock) ஆகிய 3 நீதிபதிகளும் அலுவலகத்தில் தங்களது பணி நேரத்தின் போது ஆபாச படம் பார்த்துள்ளனர்.
இவர்களது செயல் உச்சநீதிமன்ற உயர் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட உயர்மட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இவ்வழக்கு குறித்து அந்நாட்டின் உயர் நீதிபதியான லார்ட் சான்செலர்(Lord Chancellor) கூறுகையில், பிரிட்டன் நாட்டு நீதித்துறை சட்டங்களின்படி, இவர்களின் செயல்பாடு மன்னிக்கத்தக்கது அல்ல.
எனவே, இவர்களை பதவி நீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே நான்காவது நீதிபதியான ஆண்ட்ரு மா(Andrew Maw) என்பவர் இந்த விசாரணை முடியும் தருவாயில் தாமாகவே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top