
பாகிஸ்தான் அணியின் முதல் தர பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல்.
37 வயதான இவர் ஐ.சி.சி., நிர்ணயித்த 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்து பந்து வீசியதால் இவருக்கு, கடந்த வருடம் செப்டம்பர் முதல் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரியில் சென்னையில் நடந்த சோதனையில் தேறியதை அடுத்து, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதி தரப்பட்டது. இருப்பினும், உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை.
தற்போது, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பானுக்குப் பதில் சயீத் அஜ்மலை அனுப்ப, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சிக்கிறது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறினால் அஜ்மல் கண்டிப்பாக இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.