
அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் தயாரிப்பில் இருந்தபோதே தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக சொல்லி வந்தார் தயாரிப்பாளர் ரத்னம். என்னை அறிந்தால் படத்தை தமிழில் ரிலீஸ் செய்வதிலேயே நிறைய குழப்பங்கள் இருந்ததால் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிடுவது சாத்தியமில்லாமல்போனது. எனவே என்னை அறிந்தால் படத்தை தமிழில் ரிலீஸ் பண்ணிவிட்டு சில வார இடைவெளியில் தெலுங்கில் ரிலீஸ் செய்வது என்று முடிவு செய்தனர். அதன்படி விரைவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாக இருக்கிறது என்னை அறிந்தால் படத்தின் தெலுங்குப்பதிப்பு. எந்தவாடு காணி என்று பெயரிடப்பட்டுள்ள என்னை அறிந்தால் படத்தின் தெலுங்குப்பதிப்பின் டிரெய்லர் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது. நேரடி தெலுங்குப் படங்களுக்கு நிகரான வரவேற்பு எந்தவாடு காணி டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.